Sunday, 15 September 2013

 வருமானத்திற்கான வழி         

அன்று முதல் இன்று வரை நம்மிடையே பொதுவாக காணப்படும் பழக்கம் யாதெனில் , பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி "நல்ல படிச்சு நல்ல வேளைக்கு போ " என்பதுதான் .

         அது ஓரளவிற்கு சரி என்றாலும் அதுவே நமது வாழ்க்கைக்கு தேவையான அனைத்தயும் கொடுத்து விடுமா ? என்றால் அது கேள்வி குறியாக தான் உள்ளது

         இன்றைய பொருளாதார சூழ்நிலையில் நம்முடைய வருமானம் நமது தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவில் உள்ளதா ? அதற்கான பதில் பெரும்பாலும் "இல்லை" என்பது தான்

        எனவே, நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் வளமான வாழ்க்கையை வாழவும் வேண்டுமெனில் ஏதேனும் ஒரு தொழிலை செய்வதே சிறந்தது.

      ஆனால் அவ்வாறு தொழில் தொடங்க வேண்டுமெனில் , என்ன தொழில் செய்வது என்பது ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது ...

      அந்த பிரச்சினைகளை உடைத்து உங்களுக்கு தொழில் சம்பந்த பட்ட விசயங்களை எனக்கு தெரிந்தளவில் கூறி பயனடைய செய்யும் நோக்கத்திலேயே இந்த பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

உங்களில் யாருக்கேனும் ஏதேனும் தொழில்கள் பற்றி தெரிந்திருந்தால் அதனையும்  இங்கு நீங்கள் கூறலாம்

No comments:

Post a Comment