Tuesday, 17 September 2013

தொழில் முனைவோருக்கான அறிய வாய்ப்பு

புதிய தலைமுறை அறக்கட்டளை சார்பில் மதுரையில் சுயதொழில் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 4ம் தேதி ( 4.10.2013) அன்று காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை, திருப்பரங்குன்றம் மதுரா கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.

கருத்தரங்கத்தில், சுயதொழில் புரிய விரும்புவர்கள் திட்ட அறிக்கை தயார் செய்வது எப்படி என்பது முதல் தயாரிப்புகளை சந்தைப் படுத்துதலில் இடர்பாடுகளை இனம் கண்டு தீர்த்தல் வரை பல்வேறு பொது தலைப்புகளில் விளக்கமாக நிபுணர்கள் எடுத்துரைக்கின்றனர்.

இது தவிர பே்பபர் கப் தயாரித்தல், சுற்றுலா வளர்ச்சித்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், டெக்ஸ்டைல்ஸ், தகவல் தொழில்நுட்பத்துறை, சிறுதொழில் முனைவோருக்கான அரசு திட்டங்கள், உணவுப் பொருட்கள் பயன்படுத்துதல், சத்துணவு பொருட்கள் தயாரித்தல், ரீவைண்டிங், அலங்கார ஆடைகள் தயாரித்தல், பேட்டரி ரீசார்ஜ் செய்தல் போன்ற தொழில் பயிற்சிகள் குறித்தும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களும், வியாபாரத் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டுபவர்களும் இந்த கருத்தரதங்கில் கலந்து கொண்டு பயனடையலாம்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சுயதொழில் மதுரை 2013 கையேடு வெளியிடப்படுகிறது. இந்தக் கையேட்டில் தொழில் வழிமுறைகள், அரசு திட்டங்கள், உழைப்பால் உயர்ந்தவர்களின் வெற்றிக்கதைகள், தொழில் முனைவோருக்கான வங்கி திட்டங்கள், என பல்வேறு உபயோகரமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

கருத்தரங்கம் குறித்த மேலும் விபரங்கள் அறிய தொடர்பு கொள்க :
Puthiya Thalaimurai Foundation
No : 24, G.N., Chetty Road, T. Nagar, Chennai - 600017
Telephone : 044 - 28341219
Mobile : 87544 17500/ 87544 17338/ 87544 17308
like& share our page www.facebook.com/businessinfo

No comments:

Post a Comment